Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies
பன்னி ரண்டு நாளிதே icône

6.8 by Android Lover Noor


Feb 28, 2017

À propos de பன்னி ரண்டு நாளிதே

(Cankaimiku saiku them Muhammad)

பிறந்த நாள்

பன்னி ரண்டு நாளிதே

பதிபி றந்த நாளிதே

மன்னு யிர்க ளுக்கெலாம்

மதிபி றந்த நாளிதே. (1)

மன்னுயிர் : நிலை பெற்றுள்ளவுயிர்

மண்ணுயிர் : பாடபேதம்

வஞ்ச கர்கள் கூடிய

மக்க மாந கர்தனிற்

கஞ்சஞ் சேற் றலர்ந்ததாய்க்

கதிபி றந்த நாளிதே. (2)

கஞ்சம் : தாமரை

கதி : புகலிடம்

நாடுவளம்பெறல்

நபிபி றந்த போதினில்

நலங்கு றைந்த நாடிது

தபமொ ழிந்து வளமிகத்

தண்மை கொண்டொ ளிர்த்ததே. (3)

வரண்டி ருந்த வாறுகள்

வாரி நீர்நி றைந்தென

இருக ரைபு ரண்டுநீர்

எங்கு மோட வாயதே (4)

வாரி : கடல்

தீயணைதல்

பதிபி றந்த போதினிற்

பார சீகந் தன்னிலே

அதியெ ரிந்து வந்ததீ

அணைந்த தண்ணல் புதுமையே (5)

அதி : மிகுதி

சிலைகள் வீழ்தல்

வணங்கு தெய்வச் சிலையெலா

மசைந்து கீழ்வி ழுந்தன

குணங்கு ளிர்ந்த திங்களார்

குவல யத்து தித்ததால் (6)

திங்கள் : மதி

குவலயம் : பூமி

மாளிகை அழிதல்

அண்ண லார்பி றந்தனர்

அன்று கிஸ்ரா மாளிகை

மண்ணில் வீழ்ந்த ழிந்தது

வல்ல வன்றன் கிருபையால். (7)

வாழ்த்துக் கூறல்

குழந்தைப் பருவம் தன்னிலே

குறையி லாத குரிசிலை

வழியிற் கூட்டிச் செல்கையில்

வாழ்த்துக் கூறு மாமெலாம் (8)

குரிசில் : தலைவர், பெருமை மிக்கவர்

மதிபிளத்தல்

மதிபி ளந்த மாநபி

மண்ணில் வந்த மாமதி

பதியின் மிக்க மாபதி

மறைகொ ணர்ந்த சீர்நபி (9)

கதிரவன் வெளியாதல்

அத்த மித்த கதிரவ

னான சுத்த சோதியை

வித்தை யாக விண்ணுயர்

மீட்டி வைத்தார் மாநபி. (10)

கல்லிற் காற் பதிதல்

சேற்றிற் காற்ப திந்த்தென

செம்மை யான பாறைமேற்

காற்ப தித்த பூபதி

கருணை நாத ரெம்நபி. (11)

மண்ணிற் காற் பதியாமை

மணனி றைந்த பூமியில்

மலர்ப்ப தங்கள் வைக்கவே

மனநி றைந்த நபிபதம்

வழக்கம் போற்ப திந்திலை. (12)

பதம் : பாதம்

மண னிறைந்த : மணல் + நிறைந்த

மனநிறைந்த : மனம் + நிறைந்த

விரலிலிருந்து நீர் ஓடல்

விரலி டையி னின்றுநீர்

வேக மாகச் சொரிதரத்

திரண்டு நின்ற மாந்தர்கள்

தேக சுத்தி செய்தனர். (13)

தேக சுத்தி : வுளூஉ

உணவு அதிகமாதல்

ஒருவ ருண்ணப் போதுமாம்

ஊணை நின்ற யாவர்க்கும்

கருணை யண்ண லீந்தனர்

கரங்க ளாலுங் காணவே. (14)

கண்பார்வை பெறல்

பார்வை யற்ற கண்ணினிற்

பதிக ணாதர் துப்பியே

கூர்மை யான பார்வையைக்

கூட்டி வைத்தா ரெம்நபி. (15)

பதிகணாதர் : பதிகள்+நாதர்

Quoi de neuf dans la dernière version 6.8

Last updated on Feb 28, 2017

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande பன்னி ரண்டு நாளிதே mise à jour 6.8

Nécessite Android

2.3 and up

Voir plus

பன்னி ரண்டு நாளிதே Captures d'écran

Charegement du commentaire...
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.