JART


1.1 par JART ministries
Feb 22, 2019

À propos de JART

« சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் உங்களை விடுதலையாக்கும் « .-யோவான் 8: 32-

முழு உலகத்தையும் அரசாண்ட வலிமை நிறைந்த மூன்று அரசாங்கத்தில், ரோம அரசாங்கம் மிக சக்திவாய்ந்த அரசாங்கமாகும். இது கி.மு 146 முதல் கி.பி 1453 வரை உலகத்தின் மிக பிரசித்தி பெற்ற அரசாங்கமாக விளங்கியது. வீரத்தன்மை எப்படி உயர்ந்திருந்ததோ, அதே போல இந்த ரோம அரசாங்கத்தின் செல்வாக்கும் உயர்ந்திருந்தது, செல்வாக்கு எப்படி உயர்ந்திருந்ததோ, அதே போல ஞானமும், கல்வியும் இவர்கள் மத்தியில் பெருகி இருந்தது. இவர்கள் காலத்தில்தான் உலக இரட்சகரான இயேசு கிறிஸ்து மானிட மீட்புக்காக தெய்வீகத்தை மூடிமறைத்துக்கொண்டு மானிடனாக அவதரித்தார்....

ஒரு நாள், இந்த வலிமை நிறைந்த அரசாங்கத்திற்கு முன்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விசாரணைக்காக நிற்க வேண்டியதாயிற்று. கி.பி 33ஆம் காலத்தில் பிலாத்து என்பவன் ரோம அரசாங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்தவன். இவன் முதன் முதலாக குற்றமற்ற இயேசு கிறிஸ்துவை புலன்விசாரணை செய்யும் போதுதானே, எதிர்பாராத ஒரு வார்த்தையை கேள்விப்படுகிறான். ரோம அரசாங்கம் ஞானத்திலும், வீரத்திலும், செல்வாக்கிலும், கல்வியிலும் மகா உயர்ந்த ஸ்தானம் பெற்றிருந்தாலும் முழு ரோம அரசாங்கத்தையே அதிரவைத்த அந்த வார்த்தை தான் 'சத்தியம்' என்ற வார்த்தை.

சத்தியம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு ரோம அரசாங்கத்தின் கல்விபாடங்களிலும்ப தில் கிடையாது. உலகத்தில் உள்ள மற்ற எந்த மதத்தின் கிரந்தங்களிலும் இதற்கான பதிலை நாம் காணமுடியாது... அன்று கி.பி 33ம் ஆண்டில் பிலாத்து 'சத்தியம் என்றால் என்ன?' என்ற கேள்வியை எழுப்பினதோடு சரி, ஆனால் பதிலோ இன்றுவரை காணோம்.., 2000ம் வருட காலமாக உலகத்தில் எத்தனையோ கிறித்தவ பிரசங்கியாளர்கள் எழும்பியிருக்கிறார்கள், ஆனால் 100க்கு ஒரு சதவீதம் கூட சத்தியத்தை வெளிப்படுத்தி காட்டியவர்கள் நம்மில் அனேகரில்லை..

"சத்தியத்தையும் அறிவீர்கள்,

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்."

யோவான் 8:32 இன்படியே... மனிதர்களின் கொள்கைகளால் மதமாக மாறி கறை படிந்த நிலையில் இருக்கும் கிறிஸ்தவத்தை சத்தியத்தின் மூலம் மறு அழைப்பை கொடுத்து சுத்தம் செய்வது மட்டுமின்றி, இந்து, இஸ்லாம், நாத்திகம், விஞ்ஞானம் இவர்களின் கேள்விகளுக்கு சத்தியத்தின் வாயிலாக சரியான பதிலை கொடுத்து முழு உலகத்திற்கும் இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம் அவராலேயன்றி வேறு ஒருவராலும் மரணத்திற்கு பிந்தைய நித்திய வாழ்வில் பங்குள்ளவர்களாவதற்கு வழியில்லை என்ற உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்வதும் நிகழ்காலத்தினருக்கும் வருங்காலத்தினருக்கும் சத்திய வேதத்தில் எழும்பும் எல்லா கேள்விகளுக்கும் பதிலை கொடுப்பதோடு, கடவுளைக்குறித்து சரியான அறிவுள்ளவர்களை உருவாக்க வேண்டும். அப்படி சத்தியத்தை அறிந்தவர்களை கள்ள உபதேசத்தை எதிர்த்து சத்தியத்திற்காக குரல் கொடுக்கும் புரட்சியாளர்களாக உருவாக்குவதோடு சத்தியத்திற்குறிய சபைகளை ஸ்தாபிப்பதும் இயேசு ஜீவிக்கிறார் ஊழியத்தின் இன்றியமையாத பணியாக கொண்டுள்ளோம்...

கிறிஸ்துவிற்கு முன் நியாயப்பிரமாணத்தை பெற்ற பழைய ஏற்பாட்டு ஜனங்களும் கிறிஸ்துவிற்கு பின் கிருபையின் பிரமாணத்தை பெற்ற புதிய ஏற்பாட்டு ஜனங்களும் சத்திய வசனத்திற்கு செவிசாய்க்காமல் சடங்காச்சாரமான காரியங்களை கைகொண்டதினால், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியினரும், கிறிஸ்து தம்முடைய விலையேறப்பட்ட இரத்தத்தினால் சம்பாதித்த திருச்சபையினரும் இழந்து போனதும் மூடி மறைக்கப்பட்டதுமான சத்தியங்களை திருச்சபையின் அங்கத்தினர் யாவருக்கும் அறிவிப்பதும் சத்தியத்தின் பக்கமாக செவிகளையும் இருதயத்தையும் திருப்பி அதன்படி நடக்கிறவர்களை உருவாக்கவே இயேசு ஜீவிக்கிறார் ஊழியத்தினர் பிரயாசப்படுகிறோம்..!

#நன்றி.

_இயேசு ஜீவிக்கிறார் ஊழியங்கள்.

Quoi de neuf dans la dernière version 1.1

Last updated on May 2, 2019
Minor Bug Fixes

Informations Application supplémentaires

Dernière version

1.1

Telechargé par

Kozawzaw Zaw

Nécessite Android

Android 4.2+

Voir plus

Use APKPure App

Get JART old version APK for Android

Téléchargement

Use APKPure App

Get JART old version APK for Android

Téléchargement

Alternative à JART

Découvrir